சிவகாசி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது...

75பார்த்தது
சிவகாசியில் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது. 50 கிராம் கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியிலிருநது வெம்பக்கோட்டை ரோட்டிலுள்ள முள்வேலியில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். மேலும் சோதனையில் சரஸ்வதிபாளையத்தை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், அவர் மீது சிவகாசி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி