சிவகாசி: திமுக இனிமேல் நமக்கு எதிரி அல்ல. அது உதிரி KTR..

61பார்த்தது
மன்னர் ஆட்சி போல் திமுக நடத்துகின்றது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே. டி. இராஜேந்திரபாலாஜி ஆவேசு பேச்சு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று அக். 6 ஆம் தேதி, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. இராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைப்பெற்றன. பின்னர் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே. டி. ஆர்,
திமுக நமக்கு எதிரி அல்ல, அது உதிரி என்றும், திமுக பலம் இல்லாத கூட்டணி, அதிமுக பக்குவப்பட்ட கூட்டணி என்றார். மேலும் மன்னர் ஆட்சி போல் திமுக நடத்துகின்றது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அதிமுக இயக்கத்தை அழிப்பதற்கு தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் தகுதி கிடையாது, தோற்பது போல் தெரியும், பதுங்குவது போல தெரியும், அது பாயத்தான் என்பதை தேர்தல் களத்தில் காண்ப்பிப்போம்,
விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளை அதிமுக வெல்லும், சொத்து வரி, குடிநீர் வரி, நில வரி, பத்திர பதிவு கட்டணம் உயர்வு , அந்த அளவிற்கு திமுக ஆட்சி மக்களை துன்புறுத்திகிறது என்றார். மேலும் நடைப்பெற்ற இந்த கூட்டத்திற்கு அதிமுக கட்சியை சேர்ந்த பல்வேறு அணியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி