சிவகாசி: சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த கணவன் மனைவி கைது..

59பார்த்தது
சிவகாசி அருகே வீட்டில் பட்டாசுகள் தயார் செய்த கணவன், மனைவி கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கே. கே. நகர் பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்வதாக திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேலும் தகவலின் பேரில் திருத்தங்கல் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். சோதனையில் கணேசன் மற்றும் இவரது மனைவி பவுண்த்தாய் ஆகிய இருவரும் சேர்ந்து பட்டாசுகள் தயார் செய்வதை கண்டறியப்பட்டன. மேலும் தகர செட்டில் இருப்பு இருந்த பட்டாசுகள் மற்றும் கெமிக்கல் மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் இருவரும் மீது திருத்தங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி