மின்சாரம் தாக்கி மணிகண்டன் என்பவர் பலி

62பார்த்தது
மின்சாரம் தாக்கி மணிகண்டன் என்பவர் பலி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரம் பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன் வயது 29. இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருவதாகவும் மற்றும் கட்டிட கூலி வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் கடந்த ஒன்பதாம் தேதி காலையில் அதே தெருவை சேர்ந்த கண்ணன் என்ற கொத்தனார் என்பவரோடு சித்தாள் கூலி வேலைக்கு அருப்புக்கோட்டை செவல்பட்டி கண்மாய் அருகே நாகம்மாள் கோவில் பீடம் கட்டும் பணிக்கு சென்றதாகவும் அப்பொழுது அருகே போர் மோட்டாரை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மணிகண்டன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் மனைவி காஞ்சனா அளித்த புகார் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி