சிவகாசி: சிறுவன் தூக்கிலிட்டு தற்கொலை..

64பார்த்தது
சிவகாசி அருகே சிறுவன் தூக்கிலிட்டு தற்கொலை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள நியூ ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மகன் சிதம்பரம் (17). இவன் மீது இடப்பிரச்சினை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில் சிறுவன் சிதம்பரம் தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டான். இறந்தவரின் உடலை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி