சாத்தூர் - Sattur

சாத்துார்: சோதனை சாவடி அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது

சாத்துார் அருகே உள்ள சோதனை சாவடி முன்பாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது. செல்போன் மற்றும் ரொக்க பணம் பறிமுதல். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சத்திரரெட்டிபட்டி அருகேயுள்ள சோதனை சாவடி முன்பாக சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடப்பதாக சாத்தூர் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தன. மேலும் தகவலின் பேரில் மதுவிலக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் தவைல் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். சோதனையில் சாத்துார் SR நாயுடு நகரை சேர்ந்த நாகராஜன் என்பது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா மற்றும் செல்போன், ரொக்க பணத்தை பறிமுதல் செய்து, அவர் மீது மது விலக்கு போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்