சாத்தூர்: பட்டாசு ஆலைக்கு தற்காலிகமாக உரிமம் ரத்து

59பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள மேலே ஓட்டம் பட்டி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமான திருமுருகன் பட்டாசு ஆலையில் நேற்று(செப்.28) காலை 6. 30 மணி அளவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 அறைகள் தரை
மட்டமாயின மற்றும் மூன்று வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் பட்டாசு வெடி விபத்தில் அருகிலிருக்கும் கிராமங்களில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. இதனை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் தற்காலிமாக இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி