பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

85பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து. தீயணைப்புத்தகையினர் தீயை அணைக்க கடும் போராட்டம்.

சாத்தூர் அருகே உள்ள கீழ ஓடம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசாலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் தீபாவளிக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க தயாராக இருந்த இருப்பு அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியில் சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 15 கிலோமீட்டர் வரை அதிர்வு காணப்பட்டதாகவும் தொடர்ந்து பட்டாசுகள் விடுத்துக் கொண்டு இருப்பதன் காரணமாக தீயணைப்புத் துறையினர் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் இதனால் மீட்ப பணி யிள் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத் துறை என தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டா சாலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கி பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தீயை அணைத்த பின்னரே உள்ளே சென்று உயிரிழப்பு ஏதும் உள்ளதா பாதிப்புகள் ஏதும் உள்ளதா என தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி