சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து. 10 அறைகள் தரைமட்டம். அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு. விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே மேலே ஓட்டம் பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று அதிகாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டன. மேலும் குடோனில் வெடியை லாரியில் ஏற்றும் போது பயங்கர வெடி ஏற்பட்ட போது லாரியின் இஞ்சின் மற்றும் முன் பாகம் சுமார் 150 அடி முதல் 200 அடி உயரம் வரை சென்று கீழே விழும் காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பட்டாசு அருகிலிருந்த சுமார் 25 க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததை சரி செய்யும் பணியில் வருவாய் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் சுமார் 10க்கு மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாயி கிடந்தன. அதைப் போல் 3 வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாயின. றேற்று காலையில் ஏற்பட்ட வெடி விபத்து மாலைவரை நீடித்ததை பல நேரம் போராடி சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை ஆகிய ஊரை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.