தகர செட் அமைத்து பட்டாசு தயார் செய்தவர் கைது

64பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே உள்ள வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தா. கோட்டையூர் கிராமத்தில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான காலி மனையில் தகர செட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள் தயார் செய்து இருப்பு வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை காவல் நிலையத்திக்கு தகவல் வந்தன.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செண்பகவேலவன் தலைமையில் போலீஸார் சோதனை மேற்கொள்ளபட்டன. இதில் முழுமையாக தயார் செய்த பலதர பட்டாசுகள் மற்றும் கருந்திரிகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக கோட்டையூரை சேர்ந்த பாண்டியன் மீது வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி