சாத்துார்: லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது...

85பார்த்தது
சாத்தூர் அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த முதியர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் உட்கோட்டம், செவல்பட்டி to திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் முன்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தனர. மேலும் ரகசிய தகவலின் அடிப்படையில் வெம்பக்கோட்டை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கீழாண்மறைநாடு, தெற்கு தெருவை சேர்ந்த 87 வயது முதியவர் ராமராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் பிற மாநில லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்வது தெரிந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப் பண்த்தை கைப்பற்றிய போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி