சாத்துார்: சட்ட விரோதமாக சரவெடி தயார் செய்தவர் கைது..

64பார்த்தது
சாத்தூர் அருகே சரவெடி தயார் செய்து பதுக்கிய நபர் கைது. சரவெடிகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றிய எல்லைக்குட்பட்ட கனஞ்சாம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் கற்பக பட்டாசு ஆலைக்கு சொந்தமான காலிமனையில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி தயார் செய்யப்படுவதாக ரகசிய தகவல் காவல் நிலையத்துக்கு வந்தன. மேற்படி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் செண்பகவேலன் தலைமையில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அதில் தாயில்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயார் செய்து இருப்பு வைத்து இருந்த 2000 வாலா சரவெடி 40 பாக்ஸை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் லட்சமணன் மீது வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி