சாத்துார்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது...

53பார்த்தது
சாத்துார் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது. 150 கிராம் கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே உள்ள மேலப்புதுார் கிராம். இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சோதனை செய்தனர். மேலும் சோதனையில் மேலப்புதூரை சேர்ந்த ஆனந்த் என்பவர் தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ரொக்க பணம் ரூ5300/-ஐ கைப்பற்றி சாத்துார் தாலுகா காவல் நிலையத்தில் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி