
வேலூர்: சிகிச்சைக்குப்பின் டிஸ்சார்ஜ் ஆன ஓய்வுபெற்ற ஆசிரியர் பலி
வேலூர் ஒடுகத்தூர் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் (வயது 85), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் வீட்டின் எதிரே உள்ள ஒடுகத்தூர்-ஆலங்காயம் சாலையில் கடந்த மாதம் 29-ந் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பினார். பின்னர் வீட்டிலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.