ஆம்பூர் - Ambur

ஆம்பூர்: 36 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்

ஆம்பூர் அருகே 36 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்துக்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988-89ஆம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள், அவர்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குழு மூலமாக அனைவரையும் ஒன்றிணைத்தனர். தொடர்ந்து அவர்கள் 36 ஆண்டுகளுக்குப் பின் மாதனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களால் தற்போது அரசுத் துறை மற்றும் தனியார் துறைகளில் உயர்நிலை பதவிகளில் பணிபுரிந்து வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர். முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கைக்கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் ஆசிரிய பெருமக்களை கௌரவிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా