புகைப்பட கலைஞர்கள் ஒன்றிணைந்து மரம் நடும் விழா

66பார்த்தது
*திருப்பத்தூரில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக் கலைஞர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்து நடத்திய அமைதி விழிப்புணர்வு ஊர்வலத்தை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கி வைத்தார். *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் ஒன்றிணைந்து அரசு பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். ஒரு புகைப்பட கலைஞருக்கு ஒரு மரக்கன்று வீதம் குனிச்சி, எலவம்பட்டி உள்ளிட்ட நான்கு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தலா 50 மரக்கன்றுகள் வீதம் 200 மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். மேலும் மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளுடன் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி முதல் திருப்பத்தூர் நகர பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலம் மேற்கொண்டனர். இந்த அமைதி ஊர்வலத்தை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

தொடர்புடைய செய்தி