ரூ. 5 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றம்

60பார்த்தது
ஆம்பூர் நகரமன்ற கூட்டத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் உள்ளிட்ட 54 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி நகரமன்ற சாதாரண கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தார். துணைத்தலைவர் எம். ஆர். ஆறுமுகம், ஆணையாளர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் மதன் குமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் வரவு செலவு, ரூபாய் 5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் உள்ளிட்ட 54 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களுடைய வார்டு பகுதியில் நிலவும் பிரச்சனை குறித்து பேசினர். பெரும்பாலான வார்டு பகுதிகளில் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளதால் மன்ற உறுப்பினர்கள் நகரமன்ற தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி