அரசு நல திட்டங்கள் வாங்கி தருவேன் எம்எல்ஏ வாக்குறுதி

59பார்த்தது
அரசு திட்டங்களை அனைத்து மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும், நமக்குள் எந்த கருத்து வேறுபாடு இல்லாமல் பணியாற்ற வேண்டும். வாணியம்பாடி நகர திமுக சார்பபில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் வி. எஸ். சாரதி குமார் தலைமை வகித்தார். நகரமன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன், துணைத்தலைவர் கே. கயாஸ் அஹமத், நகர கழக அவைத்தலைவர் ஜி. முகமது ஜான், துணை செயலாளர்கள் கே. தென்னரசு,
எம். குபேந்திரன், வி. பத்மாவதி, மாவட்ட பிரதிநிதிகள் ஜூபிடர் சுந்தர், ஜெ. ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் மா. விமலன் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பி. எம். முனிவேல், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கே. புருஷோத்தமன், மாவட்ட துணை செயலாளர்கள் டி. கே. மோகன், ஏ. சம்பத் குமார், கே. பி. ஆர். ஜோதி
ராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி. வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி