ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

60பார்த்தது
ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. உடல்நலக்குறைவால் உயிரிழந்த டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவிற்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்தப்படும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.