

உடுமலையில் மகாசபை கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்ட ஜெனரல் ஒர்க்கர்ஸ் சங்கத்தின் உடுமலைப்பேட்டை கிளை மகாசபை இன்று (மார்ச் 19) உடுமலைப்பேட்டை அலுவலகத்தில் தோழர். என். கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. மகாசபை கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். ஜி. ரவி, ஏஜடியூசி சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி. செளந்திரராஜன் உள்ளிட்ட தோழர்கள் சங்கத்தின் நோக்கங்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களின் இன்றைய சூழல், வாழ்க்கை முறைகள் குறித்து பேசினார்கள். மகாசபையில் உடுமலைப்பேட்டை கிளை தலைவராக என். கனகராஜ், செயலாளராக வி. செளந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர்களாக சாயிதாபேகம், முத்துச்சாமி, அஸ்வின், மணிகண்டன், முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.