திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சி கோட்டை கிராமம் உடுமலை மூணாறு சாலையில் உள்ளது. இந்த நிலையில் குறிச்சிக்கோட்டையில் இருந்து அமராவதி அணை, திருமூர்த்தி அணை, பழனி, உடுமலை செல்லும் நால்வழி சாலைப் பகுதியில் பயணிகள் நிழல் கூரை இல்லாத காரணத்தால் பொதுமக்கள் சாலையோர கடைகளில் நின்று பேருந்துகள் ஏற வேண்டிய நிலை உள்ளதால், இங்கு பயணிகள் நிழல் கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.