காசு கேட்டதால் கடை அடித்து உடைத்த இளைஞர்களால் பரபரப்பு.

66பார்த்தது
சாப்பிட பானிபூரிக்கு காசு கேட்டதால் கடை அடித்து உடைத்த இளைஞர்களால் பரபரப்பு.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அடிக்கடி வரும் இளைஞர் பானிபூரி சாப்பிட்டு விட்டு பணம் தராமல் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்று காலை 30 ரூபாய்க்கு பானிபூரி சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றுள்ளார். மாலை தனது இரண்டு நண்பர்கள் உடன் மது அருந்தி விட்டு மீண்டும் அதே கடைக்கு சென்று பானிபூரி கேட்டுள்ளார். 30 ரூபாய் தர வேண்டும் என வடமாநில இளைஞர் கேட்டதற்கு பணம் தராமல் போய்விடுவேனா என கடையில் இருந்த பொருட்களை எடுத்து வீசி உடைத்து தகராறு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அருகில் இருந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தகராறில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற போது இரண்டு பேர் தப்பி ஓடினர். ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி