பேருந்து நிற்க விடாமல் இடையூறு செய்யும் வட மாநில இளைஞர்

72பார்த்தது
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்க இடம் விடாமல் கடை அமைத்த வடமாநில இளைஞர். மிரட்டல் விடுப்பதாக பேருந்து ஓட்டுநர் கூறும் வீடியோ வைரல்.


திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டம் முழுவதற்கும் ஏராளமான பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இந்த நிலையில் பேருந்து நிலையத்தின் உள் பகுதியில் பேருந்துகள் நிறுத்துமிடத்தில் வட மாநில இளைஞர்கள் கடைகளை அமைத்துக் கொண்டு பேருந்துகளை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த விடாமல் ஓட்டுநர்களுக்கு மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்து வருகிறது. மாநகராட்சி சேர்ந்த சிலர் இவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கடை நடத்த அனுமதி அளிப்பதாகவும் அதன் காரணமாக கடை அமைத்துக் கொண்டு பேருந்துகளை நிறுத்த விடாமல் தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது இதுகுறித்து செங்கப்பள்ளி செல்லும் பேருந்து ஓட்டுநர் தங்கள் பேருந்துகளை நிறுத்த விடாமல் தகராறு செய்து வருவதாகவும் 20 நாட்களாக இதே பிரச்சனை நிலவி வருவதாகவும் தங்களை மிரட்டி வரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான கூடிய நிலையில் திருப்பூர் தெற்கு போலீசார் கடை அப்புறப்படுத்தி பேருந்துகள் நிறுத்த ஏற்பாடு செய்தனர்.

டேக்ஸ் :