சர்வோதய சங்க ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

71பார்த்தது
தமிழ்நாடு சர்வோதய சங்கம் மூலம் பொருட்கள் உற்பத்தி முடக்கத்தால் விற்பனை வீழ்ச்சி அடைந்து பலர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டி சர்வோதய சங்க ஊழியர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தமிழ்நாடு சர்வோதயா சங்கம் மூலமாக ஏராளமான கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு காதி கிராப்ட் மையங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூங்கில் பொருட்கள் ஊதுபத்தி, சோப், மெத்தைகள், கைவினை பொருட்கள் என ஏராளமான பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த பொருட்கள் தரம் மிகுந்தவை என்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் திருப்பூர் தலைமை அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொருட்கள் முறையாக உற்பத்தி செய்யப்படாமலும்வெளியில் இருந்துகொள்முதல்செய்து விற்பனைசெய்யும் பொருட்களைகொள்முதல் செய்து தராமல் மெத்தனம் காட்டி வருவதால்விற்பனை பெருமளவு சரிந்து உள்ளதாகவும்அதேபோல பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஉள்ளதாகவும் உடனடியாகஉற்பத்தியை அதிகரித்துசர்வோதய சங்கத்தைமீட்டெடுக்க வேண்டும்எனகோரி சர்வோதயசங்க விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள்திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தைமுற்றுகையிட்டு உள்ளிருப்புபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி