வசூல் செய்த நடத்துனரை நார் நாராக கிழித்த Real அதிகாரி!

55பார்த்தது
பத்திரிகையாளர் எனக் கூறி பேருந்து நிலைய சாலையோர கடைகளிடம் 300 ரூபாய் வசூலில் ஈடுபட்ட நடத்துநர். மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்த இடம் வழங்காமல் வட மாநில இளைஞர்கள் கடை வைத்து பேருந்து ஓட்டுநர்களை மிரட்டுவதாக செய்தி வெளியான நிலையில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் வடமாநில இளைஞர்களின் ஆக்கிரமிப்பு கடையை அகற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து மாநகராட்சி ஊழியர்களுக்கு தான் பத்திரிகையாளர் என மிரட்டல் விடுத்தார். மது போதையில் இருந்த அந்த நபரிடம் மாநகராட்சி ஊழியர்கள் விசாரித்த போது அவர் தனியார் மினி பேருந்து நடத்துனர் என தெரியவந்தது. மேலும் வட மாநில இளைஞர்களிடம் கடை அமைப்பதற்கு தினமும் 300 ரூபாய் வசூல் செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் அந்த நபரை திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார்ந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி