தூத்துக்குடி இந்த ஆண்டின் முதல் சனி பிரதோஷத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறைசங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு தீபாராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சிவாலயங்களில் பிரதோஷ தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பிரதோஷ தினங்களில் சனி பிரதோஷம் வெகு சிறப்பு வாய்ந்ததாகும் சனி பிரதோஷம் அன்று சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்
இந்நிலையில் இன்று இந்த ஆண்டின் முதல் சனி பிரதோஷம் மற்றும் மார்கழி மாதம் வரும் சனி பிரதோஷம் என்பதால் தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாலை நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு பால் தயிர், மஞ்சள், பழங்கள் , தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதை தொடர்ந்து சுவாமி மற்றும் நந்தி பகவான் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி மற்றும் நந்தி பகவானை வழிபட்டு சென்றனர்