நன்னிலம் - Nannilam

அங்காடி கட்டிடங்களை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

அங்காடி கட்டிடங்களை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே ஆவணம் பருத்தியூர் பகுதியில் சுமார் ரூ. 12 லட்சம் மதிப்பிலான முழு நேர அங்காடி கட்டிடம், சற்குனேஸ்வரபுரம் பகுதியில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பகுதி நேர அங்காடி ஆகியவற்றை நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ் இன்று(செப்.14) திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், "கல்விதான் உங்களை சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். எனவே உங்களது குழந்தைகளை கல்வி கற்க வையுங்கள்" எனக் கூறினார். இந்த நிகழ்வில். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய செயலாளர் செருகுடி ராஜேந்திரன், குடவாசல் ஒன்றிய பெருந்தலைவர் கிளாரா செந்தில், குடவாசல் நகர செயலாளர் சுவாமிநாதன், பருத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குமார், குடவாசல் வட்டார கூட்டுறவு பொது விநியோகத் திட்டம் சார் பதிவாளர் ஐயப்பன், வடமட்டம் தொடக்க வேளாண் கூட்டுறவு செயலாளர் சொக்கநாதன் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


திருவாரூர்