நன்னிலம் - Nannilam

நீடாமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சை டிஐஜி ஆய்வு

நீடாமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சை டிஐஜி ஆய்வு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் நீடாமங்கலம், தேவங்குடி காவல் நிலைய பழைய மற்றும் சமீபத்தில் காலத்தில் உள்ள வழக்கு கோப்புகளை தஞ்சை காவல் சரக டிஐஜி ஜியாவுல்ஹக் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் இந்த நீடாமங்கலம் காவல் நிலையம் 1922ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு 105 ஆண்டு நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட அளவில் உள்ள காவல் நிலையங்களில் நீடாமங்கலம் காவல் நிலையம் மூன்றாம் இடம் பெற்று பரிசு பெற்றமைக்கு டிஐஜி பாராட்டு தெரிவித்தார். மேலும், அனைத்து காவலர்களையும் அழைத்து எதுவும் குறைபாடுகள் உள்ளதா என கேட்டறிந்தார். உடன் மன்னார்குடி டி. எஸ். பி. அஸ்வந்த் ஆண்டோ ஆரோக்கியராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தனமேரி, சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

வீடியோஸ்