நன்னிலம் - Nannilam

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்து ரூபாய் இயக்கத்தினர் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்து ரூபாய் இயக்கத்தினர் கைது

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம் தலையூர் ஊராட்சியில் சுதந்திர தினம் அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில். அடிப்படை வசதிகள் குறித்து பேசிய சமூக ஆர்வலர் பழனி ராஜா என்பவரை செல்போனை விட்டு எரிந்து தாக்கி ஆபாச வார்த்தைகளால் பேசிய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கடலூர், தஞ்சாவூர் சென்னை திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பத்து ரூபாய் இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அருகே காட்டூரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

வீடியோஸ்


திருவாரூர்
Sep 04, 2024, 04:09 IST/மன்னார்குடி
மன்னார்குடி

மாநில அளவிலான கராத்தே தேர்வு மன்னார்குடியில் நடைபெற்றது

Sep 04, 2024, 04:09 IST
மன்னார்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கராத்தே பெல்ட் தேர்வுபோட்டி நடைபெற்றது. உடற்பயிற்சி, தொடர் ஓட்டம், கட்டா குமித்தே , ஆயுதப் பயிற்சி என ஆறு வகையான தேர்வுகள் மாணவர்களுக்கு நடைபெற்றது. அனைத்து விதமான கராத்தே தேர்வுகளையும் மாணவர்கள் சிறப்பாக செய்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இதில் மஞ்சள், பச்சை, நீளம், இளம் சிவப்பு, பிரவுன் என கராத்தேர்வின் பல்வேறு நிலைகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு அதற்குரிய வண்ண பட்டைகள் போட்டியில் பங்கேற்றதற்கான சான்றிதழ்களை தரணி குழுமத்தின் தலைவர் எஸ் காமராஜ், வழங்கினார் சென்சாய் கராத்தே ராஜகோபால் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்தார் தரணி மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் அருள், தரணி சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சாந்தா செல்வி உடற்கல்வி ஆசிரியர்கள் சென்சாய்கள் உள்ளிக்கோட்டை சேகர் பிரசாந்த் ராஜேஷ் நெடுவை விமல், மற்றும் சென்சாய்கள் மாணவர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சிகள் பங்கேற்றனர்.