திருமியச்சூரில் ஆடு திருடியவர்களை துரத்திப்பிடித்த போலீசார்

68பார்த்தது
ஆடுகளை திருடி வாகனத்தில் கடத்தியவர்களை விரட்டி பிடித்த காவல்துறையினர்.

நன்னிலம் அருகே திருமீயச்சூர், கோவில் தெருவில் உள்ள சுபாஷ் என்பவரது வீட்டின் அருகே ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்துள்ளது.
இந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் ஆடுகளை டாட்டா சுமோ வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பேரளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்த பேரளம் காவல்துறையினர் விரைந்து வந்து ஆடுகளை கடத்த பயன்படுத்திய TN 50 D 7799 என்ற எண் கொண்ட டாட்டா சுமோ வாகனத்தையும், ஆடுகள் மற்றும் கடத்திய குத்தாலம் பகுதி காளியம்மன் கோயில் தெருவை சார்ந்த ராஜேஷ் கண்ணன் மற்றும் சோலை குமரன், குத்தாலம் சுந்தராம்பாள் நகரை சார்ந்த வீரமணிகண்டன், குத்தாலம் புது பிடாகை பகுதியை சார்ந்த ராஜசேகரன், திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சார்ந்த லோக ராம் ஆகியோரை விரட்டி பிடித்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். தொடர்ந்து ஆடுகளை கடத்திய ஐந்து பேரையும் சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி