அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்த தன்னார்வலர்கள்

71பார்த்தது
'டிட்டோஜாக்' அமைப்பின் அடையாள வேலை நிறுத்தம். மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த தன்னார்வலர்கள்.

தொடக்கக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த 'டிட்டோஜாக்' அமைப்பின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.
ஆசிரியர்கள் "பழைய ஓய்வூதியம் மீண்டும் வழங்குதல்" உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல இடங்களில் துவக்க பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.

அதனால் அந்தந்த பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணி புரியும் தன்னார்வலர்கள் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி