நன்னிலம் அருகே அழுகிய நிலையில் ஆற்றில் ஆண் சடலம்

53பார்த்தது
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கீழ செம்மங்குடி பகுதியில் அரசலாறு ஓடுகிறது. இந்த அரசலாற்றில் நேற்று மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பேரளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் தல சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த ஆண் சடலம் யார் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி