கோவில்பட்டி - Kovilpatti

தூத்துக்குடி: செந்தில் பாலாஜி கையில் தான் திமுக: கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி: செந்தில் பாலாஜி கையில் தான் திமுக: கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் செ. ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். முன்னாள் அமைச்சர் கடம்பூர். செ. ராஜூ பேசுகையில் "பிறப்பால் பதவி கிடைப்பது திமுக, உழைப்பால் பதவி கிடைப்பது அதிமுக இது தான் அதிமுக - திமுக இடையே உள்ள வித்தியாசம். கருணாநிதி மகன் மு. க. ஸ்டாலின், கருணாநிதி பேரன் , மு. க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் என்ற பிறப்பால் பதவிக்கு வந்தனர். மருத்துவத் துறையில் அதிக சாதனைகள் நிகழ்த்தி அதிக விருதுகளை பெற்றுத்தந்த ஒரை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தான்ஃதற்போதைய மருத்துவதுறை அமைச்சர் ம. சு. - மாசு ஏற்படுத்தி விட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மருத்துவ துறையை கெடுத்து, மக்களின் வாழ்வினை கெடுத்து கொண்டிருக்கிறார் என்றார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా