பட்டுக்கோட்டை - Pattukottai

தஞ்சை: பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

தஞ்சை: பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

மதுக்கூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் படப்பைகாடு பாட்டுவானாச்சி காட்டாற்று பாலம் அருகே மூத்தாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் உள்ளது. மூத்தாக்குறிச்சி கிராம மக்கள் பட்டுக்கோட்டை வருவதற்கும் மதுக்கூர் செல்வதற்கும் இந்த பேருந்து நிறுத்தம் வந்து தான் செல்ல வேண்டும்.  இந்த பேருந்து நிறுத்தம் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து அருகே உள்ள மரங்கள் பேருந்து நிறுத்தத்துக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. இதனால் நிற்பதற்கு பயந்து கொண்டு பொதுமக்கள் வெளியே சாலையில் நின்று பேருந்து ஏறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதனை இடித்து புதுப்பித்து கட்ட மூத்தாக்குறிச்சி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా