தஞ்சாவூர்: மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகை கடல் உயிரினம் வின்னி

64பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கொல்லுக்காடு பகுதியை சேர்ந்த சேவியர், அந்தோணி ராஜ், ஜான்சன், ரோமன் ஆகிய மீனவர்கள் நான்கு பேரும் கடலில் மீன்பிடித்த போது, கடல்பசுவை போன்ற தோன்றம் கொண்ட அபூர்வ வகை கடல் வாழ் உயிரினமான 40 கிலோ எடையுள்ள கடல் வின்னி என அழைக்கப்படும் பாலூட்டி வலையில் சிக்கியது. உடனே மீனவர்கள் மெதுவாக வலையில் சிக்கியதை மீண்டும் உயிருடன் கடலில் விட்டனர். இதனை வீடியோவாக பதிவு செய்து, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ. எஸ். சந்திரசேகரனுக்கு அனுப்பினர்.

இது குறித்து வனச்சரக அலுவலர் ஏ. எஸ். சந்திரசேகரன் கூறியதாவது: கடல் வின்னி என மீனவர்கள் அழைப்பது மீன் அல்ல, பாலூட்டி இனம்.   கடல் பசுவை போல தோற்றம் உடைய இவை,
இவை அதிகபட்சமாக, 30–45 கிலோ வரை வளரும், அதிகபட்சமாக 1. 5 மீட்டர் நீளம் வரை வளரும்.  
இவை கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையை பராமரிக்க உதவும், கடலின் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ள உதவுகின்றன.

தஞ்சாவூர் கடல் பகுதியில் 2009 மற்றும் 2023 ஆண்டுகளில் வின்னி குட்டிகள் இறந்த நிலையில் கடல் ஒதுங்கின. தற்போது முதன் முறையாக இவ்வகை அரிய உயிரினம் பத்திரமாக மீட்டு கடலில் விடப்பட்டு உள்ளது. கடல் பசு பாதுகாப்பு மண்டலத்தில் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்றொரு அரிய உயிரினம் உள்ளது. இது தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படும்" என்றார்.

தொடர்புடைய செய்தி