திருப்பத்தூர் - Tiruppattur

உயிரிழந்த கோயில் காளை; பாரம்பரிய முறைப்படி அஞ்சலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முருக்க பட்டி கிராமத்தில் உள்ள பெரியண்ணன் சுவாமி கோயில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கோயில் காளை வளர்க்கப்பட்டு இக்காளை பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பல பரிசுகளை வாங்கி வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கோயில் காளை நேற்று (அக்.,1) உயிரிழந்தது. இக்காளையை முருக்கபட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வேஷ்டி, துண்டு மாலைகள் அணிவித்து , பெண்கள் தெய்வமாக வழிபட்டு குலவையிட்டு , இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் திடலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக, பாரம்பரிய முறையில், மேல தாளத்துடன் , வெடி வெடித்து வலம் வந்து கோவில் காளை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோயில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

வீடியோஸ்


சிவகங்கை