தெரு நாய் கடித்து மூன்று குழந்தைகள் காயம்

69பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வைரவன் பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மகள் ரித்திஷா (7). அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது தெருநாய் அவரை விரட்டி கடித்தது. பலத்த காயமடைந்த அவரை, அவரது பாட்டி மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்மேலும் அதே நாய் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் அழகர் (3), திருப்பத்தூர் தென்மாபட்டு பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் மகன் ரித்தீஷ் (9) ஆகியோரை யும் கடித்தது. காயமடைந்த இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி