திருப்பத்தூர் - Tiruppattur

தாய் இரண்டு குழந்தைகளுடன் மாயம்: போலீசார் விசாரணை

தாய் இரண்டு குழந்தைகளுடன் மாயம்: போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நேமம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா. இவருக்கு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சௌமியாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவர் வீட்டிற்கு செல்வதாக தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டி கொண்டு சென்றவர் காணவில்லை என சௌமியாவின் தாயார் லட்சுமி குன்றக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் இரண்டு குழந்தைகளையும் தேடி வருகிறார்.

வீடியோஸ்


சிவகங்கை