திருப்பத்தூர் - Tiruppattur

ரேஷன் அரிசி கடத்தல் போலீசார் விசாரணை

ரேஷன் அரிசி கடத்தல் போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் அருகே கொத்தமங்கலம் சாலையில் உள்ள பத்திரங்காடு கிராமத்தில் கோடவுன் ஒன்றில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக செட்டிநாடு தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. செட்டிநாடு போலீசார் மற்றும் குடிமை பொருள் தாசில்தார் தர்மலிங்கம், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். சம்பந்தப்பட்ட கோடவுன் உரிமையாளரை போலீசார் அலைபேசியில் தொடர்பு கொண்டனர். வந்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் பின்னர் அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்தார். அதிகாரிகள் உள்ளே செல்ல முயன்ற போது கோடவுனில் 4 நாய்கள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. உள்ளே செல்ல அதிகாரிகள் நீண்ட நேரம் தயங்கினர். பின்பு கோடவுன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 45 கிலோ எடையுள்ள 90 அரிசி மூடைகள் இருந்தது. அவற்றை கைப்பற்றினர்.

வீடியோஸ்


சிவகங்கை