60ம் ஆண்டு நற்கருணை பெருவிழாவில் மின் அலங்கார தேர்பவனி

50பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசாள் சர்ச் 60ம் ஆண்டு நற்கருணை பெருவிழாவில் நேற்று மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.
இங்கு ஆண்டுதோறும் நற்கருணை பெருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22ம் தேதி மாலை திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து விழா நாட்களின் போது மாலை சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடு, திருப்பலிகளும் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனிக்காக நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 8: 00 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திற்கு புனித குழந்தை தெரசாள் சொரூபம் கொண்டு செல்லப்பட்டு பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்தது. இதில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பங்கு இறை மக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி