சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை

78பார்த்தது
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் 61. இவர் சிங்கம்புணரியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்தார். கடந்த 2021 செப். 16 சிங்கம்புணரியைச் சேர்ந்த டிரைவர் சத்தியமூர்த்தி 27 உடன் சிங்கம்புணரி பொது மயானத்தில் மது அருந்தினார். அப்போது ராமச்சந்திரன் அணிந்திருந்த நகை மற்றும் பொருட்களை திருட நினைத்த சத்தியமூர்த்தி மது போதையில் இருந்த ராமச்சந்திரனை தாக்கினாராம் இதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் சத்தியமூர்த்தி அங்கிருந்த குப்பைகளை வைத்து ராமச்சந்திரனை தீ வைத்து எரித்து விட்டு தப்பினார். ராமச்சந்திரன் உடல் பாதி எரிந்த நிலையில் அந்த பகுதியில் கிடந்துள்ளது. இதுகுறித்து சிங்கம்புணரி விஏஓ போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கு ஆட்சியரகப்பகுதியில் உள்ள சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் அழகர்சாமி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன் குற்றம் சாட்டப்பட்ட சத்தியமூர்த்திக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலை செய்த தடையத்தை மறைத்ததற்காக 7 வருடம் கடுங்காவல் தண்டனையும் ரூ. 1000 அபராதமும், பொருட்களை திருடியதற்காக இரண்டு வருடம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துஇன்று உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி