கோட்ட வயல் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரிக்கை

82பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கோட்ட வயல் கிராமம். இக்கிராமத்தில்
சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கோட்டவயல் கிராமத்திலிருந்து எழுவன் கோட்டை வரையிலான ஒரு கிலோ மீட்டர் சாலை பள்ளமும் படுக்குழியுமாக, போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத அளவு சேதமடைந்துள்ளது. தேவகோட்டையில் இருக்கும்,
பள்ளி, கல்லூரிகள் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு கோட்டவயலில் இருந்து எழுவன்கோட்டை வழியாகத்தான் செல்ல வேண்டும் என்ற நிலையில் கிராம மக்கள் பயணம் செய்ய மிகுந்த அவதி அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டவயல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி