ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்ட கிராம மக்கள்

59பார்த்தது
சிவகங்கை மாவட்டம்
சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிவபுரிப்பட்டி ஊராட்சியில் ஆறு கிராமங்கள் உள்ளது இதில் மூன்று, மூன்று கிராமங்களாக பிரிக்கப்பட்டு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதி கிராம மக்களுக்கு கடந்த சில மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து கிராம ஊராட்சி மேலாளர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திங்கள்கிழமை முதல் பணிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி