மதுக்கடைகள் மூடல் ஆட்சியர் தகவல்

85பார்த்தது
வருகின்ற 02. 10. 2024 அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3, உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப்களில் இயங்கும் மதுக்கூடங்களை வருகின்ற 02. 10. 2024 அன்று (புதன் கிழமை) மட்டும் முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானகடைகள் அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள், மற்றும் FL2, FL3, உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் வருகின்ற 02. 10. 2024 அன்று (புதன் கிழமை) மட்டும் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இன்று இரவு சுமார் 7 மணி அளவில் வெளியில் உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி