எடப்பாடி - Edappadi

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 43). தறித்தொழிலாளி. இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பானுமதி கடந்த மாதம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் நாகராஜ் விரக்தியில் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம்(ஆக.26) வீட்டில் நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా