வீடுகளை சுற்றி பல மாதங்களாக தேங்கி நிற்கும் தண்ணீர் (Video)

52பார்த்தது
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூந்தோட்டம் தெரு மற்றும் சாய் நகரில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளைச் சுற்றி பல மாதங்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. வீடுகளின் கழிவுநீர், அருகில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீரோடு தற்போது பெய்த மழைநீரும் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு