திருப்பத்தூர் - Tiruppattur

சிவகங்கை: மேயருக்கு 101 சவரனில் தங்க சங்கிலி வழங்கிய அமைச்சர்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய மாநகராட்சி யார அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் மேயராக நகராட்சி தலைவராக இருந்த முத்துதுரையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கலந்துகொண்டு கரைக்குடி மாநகராட்சி புதிய மேயராக முத்துதுரையை அறிமுகப்படுத்தி அவருக்கு 101 சவரனில் செய்யப்பட்ட தங்க மாலை அணிவித்து, வெள்ளியிலான செங்கோல் கொடுத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே என். நேரு, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றும்போது 628 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் எடுக்கப்பட்டு 4. 28 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது முதல்வரின் சீரிய நடவடிக்கையால் கடந்த 3 ஆண்டுகளில் விரிவுபடுத்தப்பட்டு மொத்தமாக 7.25 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது, 16 புதிய கூட்டு குடிநீர் திட்ட அறிக்கை அனுப்பபட்டு நிதி ஒதுக்கீடுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜல்ஜீவன் திட்டத்தில் ஒரு ரூபாய் செலவு என்றால் 25 காசு தான் ஒன்றிய அரசு நமக்குத் தருகிறது. மீதியை முதல்வர் தான் தருவதாக தெரிவித்தவர், தமிழகத்தில் ஓராண்டு நீட்டிப்பு செய்துள்ள ஜல்ஜீவன் திட்டத்தின் நிதி கிடைத்தவுடன் கூடுதலான குடிநீர் திட்டங்கள் தொடங்கப்படும் என்றார்.

வீடியோஸ்


சிவகங்கை
Oct 09, 2024, 15:10 IST/மானமதுரை
மானமதுரை

மானாமதுரை: விவசாயம் செழிக்க முளைப்பாரி திருவிழா

Oct 09, 2024, 15:10 IST
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியனுக்குட்பட்ட தெ. புதுக்கோட்டை அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாச்சாண்டி அம்மன்கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டியும் மழை பெய்ய வேண்டியும் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இந்த கோவில் முளைப்பாரி திருவிழா கடந்த 1ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி கிராமமக்கள் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வந்தனர். மேலும் தினமும் இரவு வழிபாடு நடந்தது. முளைப்பாரிகளை எடுத்து ஊர்வலமாக சென்று முளைகொட்டு தின்னையில் வைத்த பின்னர் இன்று (அக்.,9) மீண்டும் முளைகொட்டு திண்ணையிலிருந்து முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஸ்ரீ நாச்சாண்டி அம்மன் கோவில் வைத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முளைப்பாரிகளை சுற்றி பெண்கள் கும்மி கொட்டினர் பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று ஊரணியில் இன்று (அக்.,9) மாலை கரைத்தனர்.