திருப்புவனம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை

83பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொட்டப்பாளையம், நெல் முடிக்கரை, திருப்பாச்சேத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (அக். 17) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை திருப்புவனம், புதூா், செல்லப்பனேந்தல், பழையூா், அல்லிநகரம், லாடனேந்தல், கீழராங்கியம், மேலராங்கியம், கலியாந்தூா், வயல்சேரி, மேலவெள்ளூா், மாங்குடி, அம்பலத்தடி, மணலூா், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், அதிகரை, வடகரை, பூவந்தி, பொட்டப்பாளையம், புலியூா், கொந்தகை, கீழடி, சொட்ட தட்டி, சயனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாச்சேத்தி, மாரநாடு, பழையனூா், மேலச்சொரிக் குளம், வெள்ளிக்குறிச்சி, ஆவரங்காடு, முதுவ வந்திடல், மேலச்சொரிக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்றாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி