புதுக்கோட்டை: அரசு பேருந்து டயர் வெடித்ததால் பொதுமக்கள் அச்சம்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து நாகுடி செல்வதற்கு நகர பேருந்து வந்து கொண்டிருக்கும் வழியில் வடகரை முருகன் கோவில் அருகாமையில் டயர் வெடித்ததில் பயங்கர சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை, தமிழக அரசு பேருந்துகளை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.