அறந்தாங்கி - Aranthangi

தன்னையும், மகளையும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் மீது புகார்

மீமிசல் அருகேகணவன் மற்றும் மருமகன் இறந்த நிலையில் தனது சொத்தை கைப்பற்றியதுடன் தன்னையும் தன் மகளையும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டையார் கோவில் தாலுகாமீமிசல் அருகே உள்ளசேமங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அஞ்சம்மாள் இவரது ஒரே மகளுக்கு திருமணம் ஆகி மருமகனும் இறந்திருக்கின்ற நிலையில் தனது 11/2 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியதுடன் தனது குடும்பத்தை பாதையில் நடக்க கூடாது என்று அடிக்கடி தொந்தரவு செய்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மூதாட்டியின் கொழுந்தன் கணேசன் (45)மற்றும் கணேசன் மனைவி சுதா (40)ஆகியோர் தன்னை மண்வெட்டியால் நான்கு ஐந்து முறை வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததுடன் தனது கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்க செயினையும் அறுத்துக் கொண்டு தன் மகளுடைய ரூபாய் 15, 000 மதிப்புள்ள செல்போனையும் பரித்து சென்றதாகவும், அதனை தடுக்க வந்த தனது மகளையும் மண்வெட்டியால் வெட்டியதால் இருவரும் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சம்மாள் தன் குடும்பத்தையும் தன்னையும் கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் எனவே காவல்துறை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

வீடியோஸ்


புதுக்கோட்டை